தேடுங்கள்.....

Wednesday, October 19, 2022

 

My reflection on the inspirational speech by Dean Furness


From this speech, If I had been in that situation, I could have easily lost all hope. This speech is so inspiring and life-changing for many people who are going through the same thing. "When you stop comparing yourself to others, you can accomplish great things," is a quote that stuck with me. That mindset is critical for broken people and those who want to succeed in life. Everyone has a goal to achieve, and when you focus on those things, you can achieve amazing things. When something bad happens in your day, remember that it is just a part of it.

In this brief speech, he taught me valuable life lessons. Another quote that has influenced my life is "The sooner you move on to what's next, the sooner you can start attacking things." This is very true; when you begin to focus on the negative without your knowledge, you will become anxious and depressed. So, once you start moving, your life will change dramatically. Finally, this speech instilled confidence and motivation in me.

All Happens for a reason

Thursday, November 21, 2013

ஜோக்ஸ் - 11

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...

"
இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?

காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..

ஏன்.. என்ன ஆச்சு..?

என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..

செத்துட்டாங்களா..?

இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
டைரக்டர் : ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..

நடிகை : சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!
டைரக்டர் : ??????????????????????????????????

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ராமு : டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு : ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே

தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருக்காரு!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நள்ளிரவில் அந்த நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்.

இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.

அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.

20
நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.

சார்இ அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள் என்று அலறினான் அவன்.

நான்தான் உங்களுக்கு முன்னமேயே சொன்னேனே நீங்கள் அந்த
படுக்கையில் இருக்கும் பெண்மணியை தொந்தரவு செய்யாத வரையில்
நிம்மதியாக தூங்கலாம் என்றார் பொறுப்பாளர்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்

Thursday, September 26, 2013

ஜோக்ஸ் - 10


நர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா இருக்காங்க ? நர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம். அதான்..... 

********************************************************************************* 
மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ? 
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு 

********************************************************************************* என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. . ஏன்... என்னாச்சு ? பில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா... 

********************************************************************************* அவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி சொல்ற..? சதா வாந்தியா வருதுனு சொன்னா... சாதா வாந்தியா, இல்ல ஸ்பெஷல் வாந்தியானு கேட்குறாரே.... 

********************************************************************************* 
அதிகாரி : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ? 
பைலட் : யாரோ ஒரு பாராசூட் வீரர், விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. . 

********************************************************************************* 
கல்யாண புரோக்கர் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக மூத்த மகளுக்கு தங்கத்துலயும், ரெண்டாவது மகளுக்கு வெள்ளிலயும், மூணாவது மகளுக்கு வெண்கலத்துலயும் நகை செஞ்சு போடறதாச் சொல்றது நியாமில்லை சார்....

 ********************************************************************************* தயாரிப்பாளர்: இந்த இயக்குநரை நம்பி காசு போட்டுப் படம் எடுத்தா நிச்சயமா நஷ்டப்பட மாட்டோம்.... நண்பர்: எப்படிச் சொல்றீங்க...? 
தயாரிப்பாளர்: படம் ரிலீசாகும் போது பிரச்சினை ஏற்பட்டு, நஷ்டம் வந்துடாமா இருக்க முன்னெச்சரிக்கையா இப்பவே ஷூட்டிங் பாக்க மக்களுக்கு டிக்கெட் கொடுத்து கலெக்‌ஷனை ஆரம்பிச்சுட்டாரே.... 

********************************************************************************* 
தலைவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியா சொல்றது... ஏன்... அப்படி என்ன சொன்னார்? தன்னுடைய ரெண்டாவது மனைவி வீட்டுக்குப் போறதை, ‘சிங்கம் 2' பார்க்கப் போறேனு சொல்றார்.... 

********************************************************************************* 
என் கணவர் அநியாயத்துக்கு பயப்படறார்... ஏன் என்னாச்சு..? என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட முதல்ல தியேட்டர்ல தான் ரிலீஸ் பண்ணனுமாம். இல்லாட்டி ‘திருட்டு விசிடி' கேஸ்ல 3 வருஷம் கம்பி எண்ணனும்னு பயப்படறார்.... 

********************************************************************************* 
என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா போற மாதிரி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பாங்க....? ‘ராவோட ராவா'.......

 ********************************************************************************* 

 நன்றி! வெப் தமிழன்

Saturday, August 10, 2013

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
palm-reading1 கைரேகை  சாஸ்திரம்
palm-reading கைரேகை சாஸ்திரம்
கைரேகை பலன்கள்:
பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார் என்பது எமது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
விதி ரேகை:
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.
ஆயுள் ரேகை:
ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.
palmistry-major-lines1 கைரேகை சாஸ்திரம்
palmistry-major-lines1 கைரேகை சாஸ்திரம்
புத்தி ரேகை:
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது! உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.
ஆரோக்கிய ரேகை:
ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை:
உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Friday, August 9, 2013

ஆண்களுக்கான மச்ச பலன்கள்!

images
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.
இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்களை பார்ப்போமா…

01. புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
02. நெற்றியின் வலது புறம் & தனயோகம்
03. வலது புருவம் & மனைவியால் யோகம்
04. வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
05. வலது கண் & நண்பர்களால் உயர்வு
06. வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
07. இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
08. மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
09. மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
10. மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
11. மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
12. மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
13. மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை,
கலைத்துறையில் நாட்டம்
14. வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
15. இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
16. வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
17. இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
18. காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
19. தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
20. கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
21. இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால்
விரும்பப்படுவார்
22. வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
23. வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
24. அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார,
ஆடம்பர வாழ்க்கை
25. புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

நன்றி: துளிகள் வெப்

Monday, August 5, 2013

நட்பின் நிழல்




முற்றத்துப் பூமரமாய் என்
முகத்தெதிரே வந்து போகும்
நட்பின் நிழல்கள் உன்னை
நிஜப்படுத்தி கொண்டிருக்கும்

எனது வீட்டுத்தோட்ட
மரங்களில் ஓடித்திரிந்து விளையாடும்
அணில்களின் பாய்ச்சல்கள்
உனது நொடிக்குரும்புகள்

நிலவின் எச்சங்களை
காலங்கடந்த ஆராய்ச்சியில்
மானுடர்கள் புகட்டிடினும்
நட்பின் சுவடுகளையே
முதன்மைப்படுத்துவர்.

பூவின் இதழ்கள் போல
நமது எண்ணங்கள் இணைந்திடும்போது
நட்பின் வாசனைகள்
எல்லை கடந்து விசாலமாகும்.

நட்சத்திரப் பூக்களை
கையில் அள்ளி
நீரோடையாய் பகிர்கிறேன்
நமது நட்பு கடலில் கலக்கட்டும்.

நண்பர்களுக்கு எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்