தேடுங்கள்.....

Wednesday, October 31, 2012

ஜோக்ஸ் 5



XXXXXXXX
ராமு:-எனக்குச் சமைப்பது,கழுவுவது,துவைப்பது இதெல்லாம் செய்து அலுத்து விட்டது;எனவேதான் கல்யாணம் செய்து கொண்டேன்.

சோமு:-அடடே! அதே காரணத்துக்காகத்தான் நான் மணவிலக்கு வாங்கினேன்!
XXXXXXXX
ராமு:-நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லுமுன் என் மனைவியை முத்தமிடுவேன்.நீ எப்படி?

சோமு:-நானும்தான்,நீ சென்றபின்.
XXXXXXXX
தர்மம்-

அன்றொரு நாள்.....

ஒரு மாலை வேளை........

ரயில்வே ஸ்டேஷன் அது!

நான் டிரெயினின் உள்ளே,

நீ வெளியே.

நம் இருவரின் கண்களும்

ஒரே நேரத்தில் சந்தித்தபோது

உன் முகத்தில் தான்

எத்தனை உற்சாகம்?

அப்போது தான்

அப்போது தான்

அந்த வார்த்தையை நீ சொன்னாய்

"
அய்யா...... தர்மம் போடுங்க சாமி! "
                                                                              

XXXXXXXX

ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.

சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!
                                                                              

XXXXXXXX

இரண்டு பெண்கள்:

முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் தேவயானி,தேவயானின்னு கொஞ்சுவாரு.

இரண்டாமவள்:இப்போ?

முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!
XXXXXXXX
கேள்வியும் பதிலும்

1)
கேள்வி:ஒரு பச்சை முட்டையை கான்க்ரீட் தரை மீது உடையாமல் போடுவது எப்படி?
பதில்: கான்க்ரீட் தரை எளிதில் உடையாது!

2)
கேள்வி:ஒரு சுவரைக் கட்டுவதற்கு எட்டு ஆட்களுக்குப் பத்து மணி நேரம் ஆனதென்றால், நான்கு ஆட்களுக்கு அதைக் கட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
பதில்: கொஞ்ச நேரம் கூட இல்லை.சுவர் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டது!

3)
கேள்வி: உன் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும்,நான்கு ஆரஞ்சுகளும்,மறு கையில் நான்கு ஆப்பிள்களும்,மூன்று ஆரஞ்சுகளும் இருந்தால் உன்னிடம் என்ன இருக்கும்?
பதில்; மிகப் பெரிய கைகள்!

4)
கேள்வி: ஒரு பாதி ஆப்பிள் மாதிரி இருப்பது எது?
பதில்: மற்றொரு பாதி!
XXXXXXXX


                                                        

ஜோக்ஸ் 4



====================================================================================ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!
=====================================================================================
(பரீட்சை ஹாலில்)
-
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
=====================================================================================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்கஅவன் வாங்குறான்..!
=====================================================================================
 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!
=====================================================================================
அப்பா: என்னடாமார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க்
வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா
எதையுமே நிறைய வாங்க முடியல

=====================================================================================
சோமு: என்னப்பாவியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!
=====================================================================================
மனைவி: ரோஸி‌ங்கறது யாரு‌ங்க?

கணவன்: ‌வி‌‌ழி‌த்தபடி, அது கு‌திரை‌ப் ப‌ந்தய‌த்‌தி‌ல்
நான் பணம் கட்டு‌ம் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்கிறாய்?

மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்று மதியம்
உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே‌ன்.
=====================================================================================
மனைவி: நம் பைய‌ன் போ‌ன் ப‌ண்‌ணி ரொ‌ம்ப நாளாகு‌‌தி‌ல்ல..

கணவ‌ன் : ‌ம்‌ம்‌ம்..

மனை‌வி : கடைசியா எப்போ போ‌ன் ப‌ண்‌ணினா‌ன்?

கணவன்: ஒரு ‌நி‌மிஷ‌ம் இரு. செக் பு‌க்கை‌ப் பார்த்து சொல்றேன்.
=====================================================================================
மனைவி: என்னங்க, கணவன் மனைவி சொர்க்கத்துல
சேர்ந்து வாழ முடியாதாமே..!

கணவன்: அதனால்தானடி அதை  சொர்க்கம்னு சொல்றாங்க..!
=====================================================================================

ஜோக்ஸ் 3



*************************************************************************************
ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு
,மீசை என்ன தாடி கூட வளரும்.
*************************************************************************************

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா
?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

*************************************************************************************

நாளைக்கு உனக்கு காலைல
5.30 மணிக்கு தூக்குன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சிரிக்க முடியுது?

ஜட்ஜ் அய்யாவுக்கு தெரியாது நான் எழுந்திருக்கறதே
7 மணிக்குத்தான்னு...
*************************************************************************************

அப்பா
: உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..

மகள்
: அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?
அப்பா
: பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!
*************************************************************************************

சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம்
சூப்பர் ..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!

அப்படியா..
? என்ன அது கடைசி வரி.. ?
அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!

*************************************************************************************

காதலன்
: உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..
?
காதலியின் தம்பி
: இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!

*************************************************************************************

ஆசிரியர்
: அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?
சின்னா
: அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
***********************************************************************************
**
காதலி
: ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..
?
காதலன்
: எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?
*************************************************************************************

"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"
"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"
*************************************************************************************

மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க

க‌ணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...

மனைவி:
???????????????????
*************************************************************************************

உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா
?
என்ன இப்படி கேட்டுட்டீங்க
?,
நான் சமைக்கலைன்னா அவ என்னை வறுத்தெடுப்பா
,
காரம் அதிகமா இருந்தா பொங்கிடுவா.

உப்பு அதிகமாகிடிச்சின்னா என்னை தாளிச்சிடுவா..

*************************************************************************************

சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!


ஏன் அப்படிச் சொல்றீங்க
?

கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!


***********************************************************************************


காலைல எழுந்ததும் உடற்பயிற்சி
, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...

இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு
?

அட
, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!
*************************************************************************************

Friday, October 26, 2012

கணவன் மென்பொருளும்... மனைவியும்..

 படித்துச் சுவைத்தவை.......


அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்க்கு,

கடந்த வருடம் நான் காதலன் 10.0 -ல் இருந்து தன்னிறைவு அடைந்து கணவன் V1.0 க்கு மாறினேன். நான் மென்பொருளை மாற்றின
நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலடங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது. குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு. குறிப்பா சொல்லனுமுனா நகைக்கடை, கைபேசி, வெளியே சுற்றுதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0. ஆனால் கணவன் V1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.

நான் கணவன் V1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது. ஆனால் இப்பொழுது கைபேசி 2.0 -யை எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்ற பதிலையே தருகிறது. எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது அமைதி 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது. வெளியே சுற்றுதல் 3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது.

கணவன் V1.0-னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு; அதற்கு பதிலா செய்தி 3.0, கிரிக்கெட் 3.0, இணையதளம் 1.5 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது. பேச்சு 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.

முக்கிய விஷயம் நீங்க அறிவுறுத்திய குற்றம் கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை. இடையிடையே மாமியார் 1.0 என்ற வைரஸ் பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது.

இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.

இப்படிக்கு,

கணவனைத் தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் மனைவி

***********************************************************************************

அன்புள்ள வாடிக்கையாளரே,

நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா கணவன் V1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க. அழுகை மற்றும் குற்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகிக்கவும்.

கணவன் V1.0 - ஐ நீங்க ஒழுங்கா பயன்படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியே சுற்றுதல் 3.9 ஆகியன எல்லாம் சரியாக வேலை செய்யும். கணவன் V1.0 -வை தாறுமாறாக பயன்படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணியடி 2.7 ஆகிய வைரஸ்கள் வர வாய்ப்புள்ளது. அதிலும் தண்ணியடி 2.7 மிக மோசமான வைரஸ் ஆகும். அது குறட்டை 2.0, அடிதடி பீட்டா V3.6 ரெண்டையும் உடன் கூட்டி வந்து உங்களுடன் மோசமாக நடப்பதுடன் உடலுக்கும் உறு விளைவிக்கும்.

எல்லா மாமியார் 1.0 வும் வைரஸ் கிருமி இல்லீங்க... அதில் உங்களுக்கு தோன்றும் குறைகளை அழித்தால் அது அம்மா V100.0 போல் இருக்கும். கணவன் V1.0 - ஐ சரியாக பயன்படுத்தினால் அது தரமாக உழைத்து உங்களுக்கு உதவிசெய்யும்.

இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், கணவன் V1.0 - க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். கணவன் V1.0 உடைந்து போகும்.

சுருக்கமா சொல்லப்போன கணவன் V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது, அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.

நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது எப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்துவதோடு, செயல்படும் திறனையும் அதிகப்படுத்தலாம்.

இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்கக்கூடாது. அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு கணவன் V1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.

நன்றி,

மென்பொருள் வடிவமைப்பாளர்.