தேடுங்கள்.....

Wednesday, October 31, 2012

ஜோக்ஸ் 3



*************************************************************************************
ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு
,மீசை என்ன தாடி கூட வளரும்.
*************************************************************************************

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா
?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

*************************************************************************************

நாளைக்கு உனக்கு காலைல
5.30 மணிக்கு தூக்குன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சிரிக்க முடியுது?

ஜட்ஜ் அய்யாவுக்கு தெரியாது நான் எழுந்திருக்கறதே
7 மணிக்குத்தான்னு...
*************************************************************************************

அப்பா
: உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..

மகள்
: அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?
அப்பா
: பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!
*************************************************************************************

சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம்
சூப்பர் ..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!

அப்படியா..
? என்ன அது கடைசி வரி.. ?
அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!

*************************************************************************************

காதலன்
: உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..
?
காதலியின் தம்பி
: இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!

*************************************************************************************

ஆசிரியர்
: அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?
சின்னா
: அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
***********************************************************************************
**
காதலி
: ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..
?
காதலன்
: எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?
*************************************************************************************

"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"
"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"
*************************************************************************************

மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க

க‌ணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...

மனைவி:
???????????????????
*************************************************************************************

உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா
?
என்ன இப்படி கேட்டுட்டீங்க
?,
நான் சமைக்கலைன்னா அவ என்னை வறுத்தெடுப்பா
,
காரம் அதிகமா இருந்தா பொங்கிடுவா.

உப்பு அதிகமாகிடிச்சின்னா என்னை தாளிச்சிடுவா..

*************************************************************************************

சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!


ஏன் அப்படிச் சொல்றீங்க
?

கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!


***********************************************************************************


காலைல எழுந்ததும் உடற்பயிற்சி
, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...

இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு
?

அட
, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!
*************************************************************************************

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................