தேடுங்கள்.....

Wednesday, March 27, 2013

படித்ததில் பிடித்தது 4

லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க.

பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?

பொண்ணு: உன் இஷ்டம்

பையன்: சரவணபவன்?

பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்…?

பையன்: அப்போ செட்டிநாடு…?

பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்

பையன்: ம்ம் கேஎஃப்சி….?

பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..

பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு

பொண்ணு: உன் இஷ்டம்…
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?

பொண்ணு: உன் இஷ்டம்…

பையன்: படத்துக்கு போலாமா….?

பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு…

பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?

பொண்ணு: வேணாம்…

பையன்: காஃபி ஷாப்….?

பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்…

பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது….?

பொண்ணு: நீயே சொல்லு…
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்….

பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..

பையன்: ஓ… நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல… பஸ்லதான் போகனும்

பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்

பையன்: அப்போ ஆட்டோ..?

பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?

பையன்: அப்போ நடந்து போகலாம்..

பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது….

பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?

பொண்ணு: உன் இஷ்டம்…

பையன்:……

இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................