தேடுங்கள்.....

Wednesday, March 27, 2013

படித்ததில் பிடித்தது 5

காதலி மிஸ்ட் கோல் குடுக்கிறா….

உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்…

அவா: ஹலோ…

இவர்: ஹாய்டா…. சொல்லு…

அவா: இல்ல… சும்மா தான் கோல் பண்ணினன்…

இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்… எப்பயுமே மிஸ்ட் கோல் தானே…

இவர்: ஓ! என்ன பண்றாய்?

அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க?

இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்… இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக் கேக்கிறன்…

அவா: நல்ல பாட்டு…

(இப்பிடியே சொல்லிக் கொண்டு ‘மழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்…’ எண்ட வரிய மெல்லிய குரலில பாடுறா…)

இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?

இவர்: ஹேய்… நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?

அவா: சீ… போடா….

இவர்: இன்னொரு தரம் பாடன்….

அவா: என் றூம் மேற்ஸ் (room mates) எல்லாம் படுத்திற்றாங்க… எழும்பிடப் போறாங்க….

இவர்: (மனதுக்குள்) உண்மைதான்…. பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்…

இவர்: கமோன் டா…. பிளீஸ்….

அவா: போ…….டா…… நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்….

இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே…

இவர்: ஹேய்… நீ பாடினது நல்லா இருந்திச்சுடா…. பிளீஸ் பாடேன்….

அவா: எனக்கு ஒருமாதிரி இருக்குடா….

இவர்: இதில என்னம்மா இருக்கு…. நீ நல்லாத்தானே பாடுறாய்….?

அவா: அத நீ தான் சொல்லணும்… எனக்கெப்பிடித்தெரியும்?

இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்ல… சொல்லிற்றன்…

இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?

அவா: ஏன்டா படுத்திறாய்….

இவர்: ஓகே… விடு…. (விருப்பின்றி)

அவா: எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல…..லடா…..

இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்…

இவர்: ம்… ம்…

அவா: சரி…. இவ்வளவு கேக்கிறாய்…. உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்….

இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்….

இவர்: கிரேட்…

அவா: எந்தப் பாட்டுப் பாடட்டும்?

இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு…. பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன….

இவர்: ம்ம்ம்ம்ம்ம்…. உன் பேரைச் சொல்லும் போதே’ from அங்காடித் தெரு?

அவா: நைஸ் சோங்…. பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா….

இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது…. பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?

இவர்: அப்ப ‘சின்னச் சின்ன ஆசை’?

அவா: இல்ல… உன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்…

இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன…

இவர்: கூல்…

(க்ம்ம்… எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறா… பிறகு ஒரு வரி பாடுறா… பிறகு…)

அவா: இல்ல வேணாம்… நான் shy ஆ பீல் பண்றன்டா….

இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு…. உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே…. பாடு பாடு…

அவா: பாத்தியா… நக்கலடிக்கிறாய் பாத்தியா?

இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே…. பிறகென்ன….

இவர்: இல்லடா…. நீ shy ஆ பீல் பண்றாய் எண்டாய் தானே… அதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்….

அவா: ம்… ம்…

இவர்: பிளீஸ் பாடன்….

அவா: நாளைக்கு பாடட்டுமா?

இவர்: (மனதுக்குள்) அப்பாடா… தப்பிச்சன்….

இவர்: சரிம்மா… உனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு….

அவா: ம்.. ம்…

இவர்: குட் நைட் டா…

அவா: குட் நைட் டா…

இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்…

அவா: ஸ்வீற் ட்றீம்ஸ்…. பாய்…

இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு…

சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்…

அவா: ஏய்… நித்திரை கொண்டிற்றியா?

இவர்: (மனதுக்குள்) இல்ல…. 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்…

இவர்: இல்லம்மா…

அவா: அப்ப என்ன பண்றாய்?

இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்… என்ன கொடுமை இது…

இவர்: இல்ல… மட்ச் பாத்திற்று இருந்தன்…

அவா: சரி அப்ப நீ மட்ச் பாரு… நான் படுக்கிறன்…

அவா: ஹேய்… நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா…

இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி…

இவர்: இல்லடா…. ஒண்டும் இல்லடா…

அவா: ஐ ஆம் சொறிடா…

இவர்: இற்ஸ் ஓகே டா….

(பிறகு வழமையைப் போல குட் நைட், ஸ்வீற் ட்றீம்ஸ் சொல்லி சொல்லி படுத்திருவாங்கள்…..)

1 comment:

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................