தேடுங்கள்.....

Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Friday, August 2, 2013

ஜோக்ஸ் - 9

 *******************************
முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
*******************************
ஞாபக மறதி
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே
*******************************

இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்
அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
*******************************

என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
*******************************


டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்
*******************************


டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
*******************************


அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்
*******************************


இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
*******************************


மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
*******************************


டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே
*******************************

பெண்கள் இப்படித்தான்...



பனி பெய்துகொண்டிருந்த திங்கட்கிழமை காலையில், எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. கார்கள் இரண்டும் மிகப் பலத்த சேதமாகின ஆனால் காரில் பயணம் செய்த இருவருக்கும் தெய்வாதீனமாக ஒன்றும் ஆகவில்லை. 

ஒரு காரினுள்ளேயிருந்து வெளியே வந்த ஆண் மற்றைய காரின் ஓட்டுனராகிய பெண்ணைப் பார்த்து திட்டத்தொடங்கினான். அந்தப்பெண் பொறுமையாக  "இதோ பார் எங்கள் இருவரது கார்களும் பலத்த சேதமாகிவிட்டன, ஆனால் பார் கடவுள் செயலால் நாங்கள் இருவருமே பிழைத்துக்கொண்டோம். ஏன் நாங்கள் நண்பர்களாகி நமது மீதமுள்ள வாழ்நாட்களை சந்தோஷமாக களிக்கக்கூடாதென்றாள் ?"  

அதற்கு அவன் "உண்மைதான் ஆனாலும் தவறு உன் பக்கம்தான், பெண்களை கார்கள் ஓட்ட அனுமதிக்கவே கூடாது என்றான்."  அவள் மேலும் பொறுமையாக, "இதோ பார் இன்னொரு அதிசயம் எனது கார் முழுமையாக சேதமானாலும் நான் வைத்திருந்த வைன் போத்தல் இன்னும் அப்படியே இருக்கிறது, மெய்யாக கடவுள் நாங்கள் இதை அருந்தி எங்களது அதிஷ்டத்தை கொண்டாடவே விரும்புவார் என்றாள்."

சிறுது யோசித்த அவன் "சரி" என்று கை குலுக்கி போத்தலில் இருந்த அரைவாசி வைனை குடித்துவிட்டு மீதமுள்ளதை அவளிடம் நீட்டினான். அவள் திருப்பி அவனிடமே தந்துவிட்டாள்.

அவன், "ஏன் நீ அருந்தவில்லையா?"

அவள், "இல்லை, நான் போலீஸ் வரும் வரையில் காத்திருக்கிறேன் "