தேடுங்கள்.....

Thursday, April 4, 2013

படித்ததில் பிடித்தது 6

ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....

புத்திசாலி : என்ன சார்..?

போலிஸ் : ஓவர் ஸ்பீட்..?

புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.

புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.

போலிஸ் : லைசென்ஸ் இல்லையா..?

புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.

புத்திசாலி : அதுவும் இல்ல.

போலிஸ் : என்ன..?

புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.

போலிஸ் : இது திருட்டு வண்டியா?

புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.

போலிஸ் : கொன்னுட்டயா..? அவர் பாடிய என்ன பண்ணுன..?

புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....

பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.

உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.

புத்திசாலி : பிரச்சனையா சார்..?

உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே..?

புத்திசாலி : கொலையா..?

உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.

புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.

உயர் அதிகாரி : இது யார் கார்..?

புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.

உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.

புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.

உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய
திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல்
சொல்லிட்டார்.நீங்க போகலாம்.

புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா..?

நன்றி! ஈகரை 

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................